தேவைகள் தொடர்பில் ஆராய தே. கா தலைவரை சந்தித்த சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்கம்.



நூருள் ஹுதா உமர்-

சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களை சந்தித்து சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தேவைகள் மற்றும் முன்னேற்ற செயற்பாட்டுகள் தொடர்பில் ஆராயும் சந்திப்போன்று இன்று (02) நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா, செயலாளர் ரோஷன் மஜீத், பொருளாளர் ஏ.ஏ.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது மக்கள் வங்கி முகாமையாளர் மற்றும் சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :