கண்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன்..

மன்னார் லெம்பட்-
ன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரியாக கடந்த 2 வருடங்களாக கடமையாற்றிய எஸ்.கிருஸாந்தன் இன்றைய தினம் (18) கண்டிக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நொச்சியாகம பகுதியை சேர்ந்த சி.ஏ.ஜெயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரியாக கடந்த 2 வருடங்களாக கடமையாற்றிய எஸ்.கிருஸாந்தன் மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக பல வருடங்களின் பின்னர் தமிழராக ஒருவர் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் மக்களிடம் அன்பாகவும் பண்புடனும் தனது கடமையினை மேற்கொடுள்ளார்.

போதைப் பொருள் தடுப்பு , விழிர்ப்புக்குழு அமைத்தல் மற்றும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் கால கட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகி தீர்த்து வைத்து மன்னார் மக்களிடம் நன் மதிப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :