கொள்ளுப்பிட்டி மகாநாம கல்லூரியில் இடம் பெற்ற சர்வதேச சிறுவர் நிகழ்ச்சி..

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

 2020.10.03சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையமும், இலங்கை தேசத்தை பாதுக்கும் குழுவும் இணைந்து கொள்ளுப்பிட்டி பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு இன்று (03) கற்றல் உபகரணங்கள் வழங்கின.

கொள்ளுப்பிட்டி மகாநாம கல்லூரியில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சுப்ரிண்டன் ஒப் பொலிஸ் சிசிர கெத்த தந்திரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். இவருடன் கொழும்பு தெற்கு பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி மகேத் குமாரசிங்க, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் குணரத்ன, பாடசாலை அதிபர் ஆர்.ஏ.ஆர்.என்.ரத்நாயக்க, இலங்கை தேசத்தை பாதுக்கும் குழுவின் தலைவர் றபீக் புஹாரி மற்றும் கத்தோலிக்க, இஸ்லாம், பௌத்த மதகுருமாரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. முhணவர்களின் சிறுவர்தின கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :