மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில் ஆளும் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் இந்த மனுவில் கையெழுத்திட மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் கையெழுத்திட்டுள்ளார். அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்
அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது.
0 comments :
Post a Comment