அவசரமாக இலங்கைக்கு வந்த அமெரிக்க படை !

M.I.இர்ஷாத்-

மெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அவர் சந்தித்த பின், ஊடக சந்திப்பொன்றையும் கொழும்பில் நடத்தவிருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தயார்படுத்தலை செய்வதற்காக அமெரிக்க உயரதிகாரிகள் குழுவொன்று நேற்று கொழும்பை வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

16 பேர் கொண்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கட்டார் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருக்கின்றனர்.

இதேவேளை இந்தக் குழுவினரது விஜயத்தின்போது, சாதாரண சுகாதார விதிமுறைகளே பின்பற்றப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அவர்களுக்கு விதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :