சமுர்த்தி 'திரியபியச' வீடமைப்பு திட்டத்தின் கீழ் வறியகுடும்பத்திற்கு வீடு!


காரைதீவு நிருபர் சகா-

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்.02 பகுதியில் வீடு இல்லா வறிய குடும்பம் ஒன்றிற்கு ரூபா.2லட்சம் பெறுமதியை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்று திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்களால் வைபவ ரீதியாக நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக சமூர்த்தி முகாமையாளர் பி.பரமாநந்தம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் பிரதேச செயலக கணக்காளர் பி.அரசரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு இவ் வீட்டை அவ் பயனாளியிடம் கையளித்தனர்.

இதேவேளை 'சவ்பாக்கீய தக்மா' வீடமைப்பு திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம்04 பகுதியில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றிற்கு ரூபாய் 6.லட்சம் பெறுமதியான வீட்டூக்கான அடிக்கல் நாட்டு வைபவம் திகதி திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் பி.பரமானந்தம் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்கழ்வில் அதிதிகள் அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :