காரைதீவு நிருபர் சகா-
திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்.02 பகுதியில் வீடு இல்லா வறிய குடும்பம் ஒன்றிற்கு ரூபா.2லட்சம் பெறுமதியை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்று திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்களால் வைபவ ரீதியாக நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக சமூர்த்தி முகாமையாளர் பி.பரமாநந்தம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் பிரதேச செயலக கணக்காளர் பி.அரசரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு இவ் வீட்டை அவ் பயனாளியிடம் கையளித்தனர்.
இதேவேளை 'சவ்பாக்கீய தக்மா' வீடமைப்பு திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம்04 பகுதியில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றிற்கு ரூபாய் 6.லட்சம் பெறுமதியான வீட்டூக்கான அடிக்கல் நாட்டு வைபவம் திகதி திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் பி.பரமானந்தம் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்கழ்வில் அதிதிகள் அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.
0 comments :
Post a Comment