வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்கான தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்
திட்டத்திற்கு அமைய வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் வினியோகிக்கும் நிகழ்வு நேற்று (21) தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை வடக்கு கிராம சேவகர் பிரிவில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது.
அரசின் தேசிய வேலைத் திட்டம் ஊடாக இது நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் போது மரக்கன்றுகள் குறித்த பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதில் தம்பலகாமம் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் சமூர்த்தி வங்கி முகாமையாளர், முள்ளிப்பொத்தானை வடக்கு பிரிவின் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment