சாதாரண நோயுள்ளவர்கள் மருந்து எடுக்க வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்கள் குறித்த பிரதேசத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பொதுமக்களை பாதுகாக்க வேண்டியே இத் தீர்மானம் வைத்தியசாலை நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் சாதாரண நோய்களான கடுப்பு, வலி, கை கால் குத்து, முகத்தில் புள்ளிகள், அல்சர், கடி, பூச்சிக்கு மருந்தெடுத்தல் போன்ற சிறுசிறு நோய்களுக்காக வைத்தியசாலைக்கு வந்து பாரிய நோய்களை தொற்றிக் கொள்ளாமல் முடிந்தளவு அனைவரும் பாதுகாப்பாக வீட்டினுள் இருந்து கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment