அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்தவர்களுக்கு வழக்குத் தாக்கல்

ஏறாவூர்  எம்ஜிஏ நாஸர்-

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை சாதகமாக பயன்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 09 வர்த்தகர்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக, மக்கள் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களால் சனிக்கிழமை (10) அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக, கூறினார்.


நாட்டரிசி, வெள்ளை மற்றும் சிவப்பு 96 ரூபாவாகவும், சம்பா அரிசி மற்றும் சிவப்பு 98 ரூபாவாகவும், பச்சை அரிசி வெள்ளை மற்றும் சிவப்பு 93 ரூபாவாகவும், கீரிச்சம்பா அரிசி 120 ரூபாவாகவும், கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.

நாடுதழுவிய ரீதியில் இவ் விசேட சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும், மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :