கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுஹைல் அஸீஸ் அவர்களின் அன்புக் கணவர் அப்துல் அஸீஸ் இன்று காலமானார்.
அவரது மறைவு குறித்து கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
அன்னாருக்கு உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரது ஜனாஸா இன்று மாலை சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment