கொழும்பிலும் கொரோனா பரவல்-சில இடங்களில் உறுதி


J.f.காமிலா பேகம்-

கொழும்பு இராஜகிரிய பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இராஜகிரிய – வெலிகடவத்த பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் தொழில்புரியும் ஊழியர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டமை இன்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த தகவலை கோட்டே பிரிவு பொது வைத்திய அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு 07இல் உள்ள புனித பிரிகேட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரது பெற்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த கல்லூரியினால் இன்று பகல் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :