கொட்டகலையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி



க.கிஷாந்தன்-
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.
கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் சின்ன டிரேட்டன் பிரிவு, கே.ஒ பிரிவு, ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இவர்கள் இருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி இருவரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று உறுதியான நிலையில் அவர்கள் இருவரும் அம்பாறை பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்படவுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து கொட்டகலை நகரிற்கு வரும் பிரதேச மக்களை சுகாதார நடைமுறைகளைகளுக்கு ஏற்ப வர வேண்டும் எனவும், முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும், நகரிற்கு அநாவசியமாக வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :