ரியாஜ் பதியுதீன் விடுதலை; இன்று விசேட விசாரணை

J.f.காமிலா பேகம்-

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதான விசாரணை அதிகாரி ஆகியோர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த இருவரும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணையுடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனை இன்றி ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :