கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்



க.கிஷாந்தன்-
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் அட்டன் நகர் பகுதியில் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை திருச்சபை கொழும்பு மறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் தோட்ட சமூக அபிவிருத்தி பணியகத்தின் ஊடாக 12.10.2020 அன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தோட்ட சமூக அபிவிருத்தி பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர் என்.நித்தியா, முகாமையாளர் என்.லோகராணி, மஸ்கெலியா பிரதேச சபையின் சுகாதார நிர்வாகி எஸ்.ஆனந்தன் உட்பட உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு துண்டுப்பிரசுரத்தை மக்களுக்கு வழங்கி வைத்ததோடு விழிப்புணர்வு பதாதைகளையும் காட்சிப்படுத்தினர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பான வழி முறைகள் அடங்கிய குறித்த துண்டுப்பிரசுரம் அட்டன் நகர் பகுதி, அரச தனியார் பேருந்து தரிப்பிடம், டிக்கோயா, பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட் அகிய பிரதான நகரங்கள் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :