சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்து பிரண்டிக்ஸ் நிறுவனம் அறிக்கை.

J.f.காமிலா பேகம்-

ந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ அண்மையில் எந்தவொரு நபரையும் அழைத்துவரவில்லை என்று பிரண்டிக்ஸ் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.


விசேட ஊடக அறிக்கை ஒன்றை இன்று மாலை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, ஊழியர்களுக்கு சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றவும், தேவையான சுகாதார வசதிகளை செய்துகொடுக்கவும் நிறுவனம் முன்வரவில்லை என்று கூறப்படுகிற குற்றச்சாட்டையும் பிரண்டிக்ஸ் நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது.

மேலும் மினுவங்கொடை நிறுவனத்திற்கு முன்பாக இருந்து பெண் ஒருவரால் பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா அவதானம் இருந்தும் தனது வாடகை வீட்டிலிருந்த ஊழியர்களை நிறுவன முகாமை வேலைக்குவரும்படி அழைத்ததாக சொல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


இதற்கு பதிலளித்திருக்கும் பிரண்டிக்ஸ் நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டையும் நிராகரித்திருக்கிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :