ஏ.எச்.ஹஸ்பர்-
இதனை அடுத்து கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வாராந்த சந்தை முடக்கப்பட்டுள்ளதோடு வர்த்தக நிலையங்கள் மற்றும் நுகர்வோர்களின் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் புதன் மற்றும் சனிக்கிழமை இடம்பெறும் வாராந்த சந்தை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்களில் சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடை வெளி பேணுதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதோடு அவ்வாறு செயல்படாத வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு பிரதேச சுகாதார பரீசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்
அத்தியவசிய பொருட்களை கொள்வளவு செய்வதற்கு ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வெளியில் வரவேண்டும் எனவும் அவ்வாரில்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவார்கள் எனவும் நேற்று (24)கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதேச செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
0 comments :
Post a Comment