நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்ற இரண்டு மதுபானசாலைகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்கள் சுயதனிமைக்குற்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொட்கலை, டிரேட்டன் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானத்தையடுத்து அவர் கந்தகாடு மருந்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந் நிலையில், குறித்த நபர் கொட்டக்கலை நகரிலுள்ள இரண்டு மதுபானசாலைகளுக்கு சென்றுள்ளமை தெரிய வந்ததையடுத்து இரண்டு மதுபானசலைகளும் சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்கள் சுயதனிமைக்குட்;படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அட்டன் நகரம் சுய தனிமைப் பிரதேசமாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா நேற்று அறிவித்த நிலையில் அட்டன் நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு அட்டன் - டிக்கோய நகரபையினால் கிருமி நாசினி தெளிகப்பட்டதுடன், இன்று இரண்டாவது நாளாகவும் அட்டன் நகரம் மூடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment