பெலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று :


நூருள் ஹுதா உமர்-

மது நாட்டில் இரண்டாம் கட்டமாக அதிகளவில் பரவிவரும் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் வழிகாட்டல் காரைதீவு பிரதேச குழுவின் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22) காலை இடம்பெற்றது.

இதன் போது தற்போது நாட்டில், குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின்
பெலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தோற்றுநிலைகளில் காரைதீவு , மாளிகைக்காடு மீன் வாடிகளின் சமகால நிலைமைகள் தொடர்பிலும், எதிர்வரும் கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. அத்துடன். இக்கூட்டத்தில் கொரோனாவை காரைதீவு பிரதேசத்தில் கட்டுப்படுத்தல் தொடர்பிலும் இக்குழுவினால் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். ஜீவராணி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன்,பிரதேச சபை செயலாளர் மற்றும் ஏனைய கொரோனா கட்டுப்படுத்தல் வழிகாட்டு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டு கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :