J.f.காமிலா பேகம்-
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி இன்று மட்டும் 274 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்களில் 267 பேர் பேலியகொட கொரோனா கொத்தனியுடன் தொடர்புடையவர்கள் என்பதோடு 07 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment