புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளைக் கோருகிறோம் - நவம்பர் 4 க்கு முன்னர் அனுப்பி வைக்கவும்



மினுவாங்கொடை நிருபர்-
கில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியன, பல சிவில் சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து, கூட்டு முன்மொழிவு ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நீதி அமைச்சின் பொதுமக்கள் முன்மொழிவுகளுக்கு பதில் அளிக்கும் முகமாக, துறை சார்ந்தோரின் வழிகாட்டுதல்களுடன் இக்கூட்டு முன்மொழிவு உருவாக்கப்படவுள்ளது.
அத்துடன், புதிய அரசியலமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிடம் இக்கூட்டு முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகள்,
01) தேசத்தின் இயல்பு
02) தேசத்தின் கொள்கைகளை வழி நடத்தும் கோட்பாடுகள்
03) அடிப்படை உரிமைகள்
04) மொழி
05) நிறைவேற்றுத் துறை (ஜனாதிபதி/அமைச்சரவை/பொதுச்சேவை)
06) சட்டவாக்கம்
07) பொதுமக்கள் கருத்துக் கோரல் உட்பட வாக்குரிமை மற்றும் தேர்தல்கள்
08) அதிகாரப் பரவலாக்கம்/அதிகாரப் பகிர்வு/வலுவேறாக்கம்
09) நீதித்துறை
10) பொது நிதி
11) பொதுமக்கள் பாதுகாப்பு
12) மேலே பிரத்தியேகமாகக் குறிப்பிடப்படாத வேறு ஆர்வமுள்ள பகுதிகள்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் ஒரு கூட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்கத் திட்டமிடுகின்றோம். இந்தச் செயன்முறையில் அனைவரினது பங்களிப்பும் வரவேற்கத்தக்கதாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை சார்பில், பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம்.ரிஸ்மி தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆலோசனைகளையும், முன்மொழிவுகளையும், constitutionproposal@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறும், இது தொடர்பில் ஆர்வமுள்ளோர்களிடமும் பொதுமக்களிடமும் தேசியத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :