கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்த 05 பேரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் மூவர் வீடுகளில் இருந்தவாறு உயிரிழந்திருக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் விபரங்களும் தற்போது கிடைத்துள்ளன.
01 கொழும்பு -02ஐ நேர்ந்த 46 வயதுடைய ஆண் நேற்று உயிரிழப்பு- இவருக்கு சிறுநீரக நோய் இருந்துள்ளது.
02 கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்தார். இவருக்கு இருதயம் சார்ந்த நோய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார்.
03 கொழும்பு 12ஐ சேர்ந்த 58 வயதுடைய பெண் உயிரிழந்தார். இவருக்கும் இருதயம் சார்ந்த நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்தவாறு உயிரிழந்தார்.
04 கொழும்பு 14ஐ சேர்ந்த 73 வயதுடைய பெண் வீட்டில் இருந்தவாறு உயிரிழந்தார். இவருக்கும் சுவாசம் தொடர்பிலான நோய் இருந்துள்ளது.
05 கொழும்பு – 15ஐ சேர்ந்த 74 வயதுடைய ஆண் வீட்டிலிருந்தவாறு உயிரிழந்துள்ளார். இவருக்கும் இருதயம் சார்ந்த நோய் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment