சாய்ந்தமருதில் அத்துமீறி அரச காணி அபகரிப்பு 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

நூருல் ஹுதா உமர்-

சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சுனாமி குடியேற்ற கிராமமான பொலிவேரியன் கிராமத்தில் அத்துமீறி அரச காணியை அபகரித்தமை தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள 06 பேர் அத்துமீறி அரச காணியை பிடித்து வேலி போடப்பட்டமை தொடர்பில் தெரியவந்ததையிட்டு பிரதேச செயலாளரின் உத்தரவுக்கமைய சாய்ந்தமருது பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ஜே.எம்.ஹஸ்மி, கிராம உத்தியோகத்தர்களான எம்.எஸ்.இல்பான், ஏ.எம்.அஜ்ஹர் உள்ளிட்ட குழுவினர் கடந்த திங்கட்கிழமை மாலை கல்முனை பொலிஸாரின் உதவியுடன் குறித்த இடத்திற்கு சென்று காணியினை அபகரித்தவர்களிடமிருந்து விடுவித்ததுடன் அரச காணியை சட்டவிரோதமாக அபகரித்த 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :