அமைதிப் படையினர் சென்ற ஹெலிகொப்டர் விபத்து- 8 பேர் பலி!

கிப்தின் சினாய் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு அமெரிக்கர்கள் உட்பட எட்டு அமைதி காக்கும் படையினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு வீரர் காயமடைந்துள்ளார் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 1978 சமாதான உடன்படிக்கையை அமுல்படுத்துவதை மேற்பார்வையிடும் சர்வதேச பணியின் ஒரு பகுதியாக அமைதி காக்கும் படையினர் குறித்த பகுதியில் கடமையில் உள்ளனர்.

வழமையான ரோந்து நடவடிக்கையின் போதே இந்த ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்றுள்ளது.

வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் ஆறு அமெரிக்க வீரர்களும் பிரான்ஸ் மற்றும் செக் குடியரசின் ஒரு வீரரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :