திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இனந்தெரியாதோரால் பெட்டிக்கடையொன்று உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.



எப்.முபாரக்-
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இனந்தெரியாதோரால் பெட்டிக்கடையொன்று உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று(2) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை சோனகர் வாடி பகுதியில் அமைந்துள்ள இப்ராகீம் முகம்மட் காசிம் என்பவரின் பெட்டிக்கடையொன்றினையே இவ்வாறு இனந்தெரியாதோரால் கடையின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடை உரிமையாளர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சோனகர் வாடி பகுதியில் பெட்டிக்கடை நடாத்தி வருகின்றார்.
பெட்டிக்கடையை துரத்தும் செயற்பாட்டில் இவ்வாறு கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக கடை உரிமையாளர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பெட்டிக்கடையின் முன்னால் திருகோணமலை சோனகர்வாடி முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலும் அமைந்துள்ளது.
திருகோணமலை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.சி.எம்.அஸ்வர் என்பவரின் தந்தையின் பெட்டிக்கடையே இனந்தெரியாதோர் உடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :