கொரோனா வைரஸ் தொற்று நோய்க்காக அட்டன் ஜும்மா பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனை

க.கிஷாந்தன்-

கொரோனா கொடிய தொற்று நோயிலிருந்து நாடும் நாட்டு மக்களும் மீண்டு வரவேண்டும் என்பதற்காக சகல மதஸ்தலங்களிலும் விசேட வழிபாடுகளை செய்யும் வண்ணம் நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கமைவாக மலையகத்தில் 08.11.2020 அன்று மாலை அட்டன் ஜும்மா பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.

அட்டன் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக குழு தலைவர் ஏ.ஜே.எம். பசீரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விசேட தொழுகையில் அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர், உப தலைவர், நகர சபை உறுப்பினர்கள், அட்டன் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த விசேட தொழுகை பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :