இலங்கை முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று சிறு கொத்தனிகள் உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார இதனை இன்று புதன்கிழமை காலை தெரிவித்தார்.
எனினும் உத்தியோகபூர்வமாக இந்த கொத்தனிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறுவதில் எந்த தடைகளும் இல்லை என்று அவர் கூறினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி என்பன மக்கள் மறந்துவிட்டது கவலை தருவதாக மருத்துவர் ஜயருவன் பண்டார மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment