அனில் ஜாசிங்க மீண்டும் கொரோனா ஒழிப்பு குழுவில்


J.f.காமிலாபேகம்-

சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி வகித்த சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, மீண்டும் கொரோனா ஒழிப்பு பணிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்தார்.

கடந்த கொரோனா வைரஸின் முதலாவது அலையின்போது மிகவும் வெற்றிகரமாக தொற்று கட்டுப்படுத்தப்பட்டமைக்கு டாக்டர் அனில் ஜாசிங்கவின் ஒத்துழைப்பு மிகப்பெரிய தாக்கமாக இருந்ததாக பலராலும் கூறப்பட்டு வந்தது.

எனினும் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு சுற்றாடல்துறை அமைச்சிற்கு மாற்றப்பட்டதை அடுத்து பல வித எதிர்ப்புக்களும் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுவந்தன.

கொரோனா அலையின் இரண்டாவது தாக்கம் ஏற்பட்டதை தடுக்க முடியாமற் போனமைக்கும் டாக்டர் அனில் ஜாசிங்கவின் இடமாற்றமே காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுவந்தது.

இந்நிலையிலேயே அவர் மீண்டும் இப்பணிக்கு உள்வாங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் இன்று நாடாளுமன்றில் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :