எப்.முபாரக் -
காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத் இன்று(6) தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக கிண்ணியா றஹ்மானியா பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கடந்த வியாழன் (5) இரவு கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் இவரது இரத்த மாதிரி பி. சி .ஆர் . பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் எனினும் சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை இன்று (6) கிடைத்திருப்பதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எனவே பொது மக்கள் பயப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுள்ளார்.
0 comments :
Post a Comment