முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்வார் என்ற செய்தி வெளியாகிருந்த நிலையில் இன்று பெஷில் பாராளுமன்றம் செல்லமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மாறாக அவர் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்க முன் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பின் நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் நாடாளுமன்றம் செல்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேசியப்பட்டியல் எம்.பி ஜெயந்த கெட்டகொட பதவியை இராஜினாமா செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment