சாதாரணதர மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு விடுக்கும் வேண்டுகோள்

ஐ. ஏ. காதிர் கான்-


2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அறிய, ஆசிரியர்களிடம் இணைய மூலம் அபிப்பிராயம் பெறப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அனைத்துப் பாடத்திட்டங்களும் எந்த மட்டத்தில் உள்ளன என்பது குறித்து, சம்பந்தப்பட்ட பாடங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்களிடமிருந்து விசாரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் நாட்டில் நிலவும் கொரோனாத் தொற்று சூழ்நிலை காரணமாக, பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டது.

இருப்பினும், பல்வேறு டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், மாகாண, வலய மற்றும் பாடசாலை மட்டங்களில் ஒன்லைன் முறை மூலமாகவும் கற்றல் செயல்முறையைத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பாடசாலைகளில் கிடைக்கும் வசதிகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ப தரம் 11 மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்துப் பாடப் பிரிவுகளையும் ஆசிரியர்கள் உள்ளடக்கிய திறன் வெவ்வேறு நிலைகளில் பெற்றிருக்கலாம்.

எனவே, இது தொடர்பாக ஒரு பரந்த புரிதலைப் பெறுவதற்கும், மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் அனைத்துப் பாடசாலைகளிலும் 11 ஆம் வகுப்புகளுக்கான பாடங்களை கற்பித்தலுக்காகப் பொறுப்பேற்ற அந்த அந்தப் பாடங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் குறித்த பாடங்கள் தொடர்பாக ஒன்லைனில் https://info.moe.gov.lk/ என்ற இணையத்தளத்தில் சென்று தொடர்புடைய தகவல்களை வழங்க வேண்டும்.

இந்தத் தகவல் 23.11.2020 முதல் ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளடக்கி அணுகுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவருக்கு தகவல்களை அணுகுவது கடினம் என்றால், grade11@moe.gov.lk
என்ற இணையத்தளம் ஊடாக உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடசாலை, மாகாணம் மற்றும் தொலைபேசி இலக்கங்களை அனுப்புவதன் மூலம் தொடர்புடைய தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

பாடத்திற்குப் பொறுப்பான ஆசிரியர்கள் சரியான தகவல்களை உள்ளடக்குவார்கள் என்றும், மாகாணம், கல்வித் திணைக்களம் மற்றும் கல்விப் பிரிவில் உள்ள அனைத்துப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், குறித்த செயல்முறையை அனைத்து மாகாண, திணைக்களம், கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கும், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. கே. பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :