கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு வழங்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.நிரோசன் மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதான தொலைக்காட்சியொன்று மற்றும் இரண்டு பத்திரிகைகளில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு தாரைவார்ப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்துடன் கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றியிருந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்சடி சில்வா, கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி துறைமுகத்தை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இவற்றை மேற்கோள்காட்டி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கம், உடனடியாக இந்த செய்திகள் குறித்த உண்மை நிலவரத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
0 comments :
Post a Comment