கொரோனா ஊரடங்கு மத்தியில் கொழும்பு துறைமுகம் இந்தியா வசம்!

M.I.இர்ஷாத்-

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு வழங்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.நிரோசன் மீண்டும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதான தொலைக்காட்சியொன்று மற்றும் இரண்டு பத்திரிகைகளில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு தாரைவார்ப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்துடன் கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றியிருந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்சடி சில்வா, கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி துறைமுகத்தை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இவற்றை மேற்கோள்காட்டி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கம், உடனடியாக இந்த செய்திகள் குறித்த உண்மை நிலவரத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :