பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தென் கிழக்கின் சொத்து என்கிறார் கல்முனை மாநகர பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர்



தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசிரியராக பட்டம் பெற்றுள்ளார். இது எமது சமூகத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் அடையாளம் மட்டுமல்லாமல் தென்கிழக்கின் சொத்தாகும் என கல்முனை மாநகர பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலேயே கல்வி கற்று, அந்த பீடத்தின் பீடாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டு இளம் விரிவுரையாளராகவும் பதவி வகித்த கலாநிதி றமீஸ் அபூபக்கர் தற்போது பேராசிரியராக பட்டம் பெற்றுள்ளார் என்பது மிகச் சிறப்பான விடயமாகும்.
இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியரும் இளம் கல்விமானும் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாக கொண்டவராவார் என்பதை என்னும் போதும் மிகவும் சந்தோசமடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்களுக்கு கல்முனை மாநகர பிரதி மேயர் என்றவகையிலும் எனது தனிப்பட்ட நற்பு சார்பிலும் தனது வாழ்த்துக்களை ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :