திருகோணமலையில் மூன்று கிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரந்திக்க லக்மால் ஜயலத் இன்று(5) உத்தரவிட்டார்.
கூம்புகார் வீதி,பாலையூற்று,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று கிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Ok
0 comments :
Post a Comment