கல்முனைப் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் கிராமிய பொருளாதார ஐந்து ஆண்டு மேம்பாட்டுத் திட்டம் - உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபரின் தலைமையிலான முயற்சிக்கு வெற்றி.



எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனைப் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர் தலைமையில் தயாரிக்கப்பட்ட கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐந்து ஆண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் கல்முனைப் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், பிரதம கிளார்க் எம்.எம்.எம்.ஹசன், பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே. எல்.யாசீன் பாவா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித் தொகையினை வழங்கி வைத்தனர்.
இத்திட்டத்தினை தயாரித்து செயற்படுத்துவதற்கு உதவிய அனைத்து திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கும்
உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :