பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் கருத்திற்கிணங்க பள்ளிவாயல்களில் துஆ பிராத்தனை..


ஏ.எஸ்.எம்.ஜாவித்-


பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் கருத்திற்கிணங்க நாட்டின் தற்போதைய கொரோனா தெற்றுநோய் மற்றும் அசாதாராண சூழ்நிலை காரணமாக பாதிப்புக்குட்பட்ட மக்களின் பாதுகாப்பு வேண்டி விஷேட துஆ பிராத்தினை நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களில் இடம் பெற்றன.

இன்று 2020.11.08 ந் திகதி மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கம்பஹா மாட்டத்தில் உள்ள நீர்கொழும்பு பெரிய பள்ளியில் புனித அல்-குர்ஆன் ஓதப்பட்டு விஷேட துஆ பிரார்த்தனைகள் இடம் பெற்றன.
பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஆர்.றியாஸ் மொஹமட் தலைமயில் இடம் பெற்ற நிகழ்வில் விஷேட துஆவை மௌலவி எம்.எச்.எம்.இஸ்மாயில் மேற்கொண்டார் . இதன்போது பள்ளிவாசலின் பிரதம இமாம் ஐ.எல்.எம்.ஹனீபா மௌலவி. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் ஏ.ஏ.எம்.அஸ்ரின்இ நௌபர் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
உறுப்பினர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :