கிழக்கு மாகாண ஆளுனர் செயலகமும்,இலங்கை கடற்படையினரும் இணைந்து செய்துள்ள கடலுக்கு அடியில் சென்று கழிவுகளை அகற்றுவம் வேலைத்திட்டம்.


எப்.முபாரக் -

கிழக்கு மாகாண ஆளுனர் செயலகமும்,இலங்கை கடற்படையினரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கடலுக்கு அடியில் சென்று கழிவுகளை அகற்றுவது,மற்றும் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று(2) திருகோணமலை கடற்கரையில் நடைபெற்றது.

இதன் போது கடற்படையின் சுழியோடிகள் கடலுக்கு அடியில் சென்று குப்பை கூழங்களை சேகரித்து தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

ஐம்பதிற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதோடு கடற்கரையின் சுற்றுப்புரச் சூழலும் இதன் மூலம் தூய்மையாக்கப்பட்டது.
இந் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளர் டி.சஞ்ஞீவ் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :