எப்.முபாரக் -
கிழக்கு மாகாண ஆளுனர் செயலகமும்,இலங்கை கடற்படையினரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கடலுக்கு அடியில் சென்று கழிவுகளை அகற்றுவது,மற்றும் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று(2) திருகோணமலை கடற்கரையில் நடைபெற்றது.
இதன் போது கடற்படையின் சுழியோடிகள் கடலுக்கு அடியில் சென்று குப்பை கூழங்களை சேகரித்து தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
ஐம்பதிற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதோடு கடற்கரையின் சுற்றுப்புரச் சூழலும் இதன் மூலம் தூய்மையாக்கப்பட்டது.
இந் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளர் டி.சஞ்ஞீவ் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment