எழுத்தாளர், சமூகசேவகர் மருதூர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்.

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

மிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக தன்னை சர்வதேசம் வரை அடையாளப்படுத்திக் கொண்ட கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி திங்கட்கிழமை (23) இரவு சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் காலமானார்.

மருதூரில் பிரகாசித்த பெண் ஆளுமைகளில் ஒருவரான இவர், 
பிரபல சமூகசேவை செயற்பாட்டாளராக, சிறந்த எழுத்தாளராக பெண்களின் கல்வி, உரிமைகள், சமூகப் பிரச்சினைகளை தனது எழுத்தால் வெளிக்கொணர்ந்து, தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அயராது பாடுபட்டவர்.

அன்னாரின் இழப்பு இலக்கிய உலகத்திற்கும் மருதூருக்கும் பேரிழப்பு.

அன்னாரின் சகல பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கம் கிடைக்க வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என பிரார்த்தனை செய்வதோடு, அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் மன நிம்மதியை வழங்கிட இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :