'மண்வாசனை' அமைப்பின்மூலம் பாதிக்கப்பட்டமக்களுக்கு உலருணவுநிவாரணம்.

காரைதீவு சகா-

னடா 'மண்வாசனை' அமைப்பின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் யுத்தத்தாலும் கொரோனாவாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது.

'மண்வாசனை' அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதேசம் பிரதேசமாகச் சென்று இவ் உலருணவுப்பொதிகளை வழங்கிவருகிறார்.

முதற்கட்டமாக நாவிதன்வெளிப்பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய ஏழாம் கிராமம் தமிழ்நாடு போன்ற கிராமங்களிலுள்ள குடும்பங்களுக்கு நேற்று வழங்கிவைக்கப்பட்டன.
அச்சமயம் அப்பகுதி அதிபர் எஸ்.இராகோபால் சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் உடன்சென்று அவற்றை வழங்கிவைத்தனர்.

தொடர்ச்சியாக மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

யுத்தத்தாலும் இதரகாரணிகளாலும் மோசமாகப்பாதிக்கப்பட்ட மக்கள் சமகால கொரோனா அச்சுறுத்தலால் மிகமோசமாகப்பாதிக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்நிவாரணம் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :