கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கம்!


J.f.காமிலா பேகம்-

கொழும்பிலுள்ள சில பகுதிகள் நாளை மறுநாள் முதல் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புறக்கோட்டை, மரதானை, டாம் வீதி மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பிரதேசங்கள் வரும் திங்கட்கிழமை முதல் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் கெளனி, ஜா-எல, நீர்கொழும்பு, ராகம, வத்தளை,பேலியகொட, கடவத்தை ஆகிய பகுதிகள் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் முடக்க நிலையில் இருந்து நீக்கப்படும் என்றும் இராணுவ தளபதி கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :