மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட தென்னிந்திய திரைப்பட பாடலுக்கு நிகரான இலங்கை தயாரிப்பு.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கிஷா பிலிம் மேக்கர்ஸ் என்டர்ட்டைமன்ட் தயாரிப்பில் தென்னிந்திய பாடல்களின் தரத்தில் உருவாகிய "கறுகறுத்தவளே" என்று ஆரம்பிக்கும் பாடல் வெகுவாக மக்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டும் பார்க்கப்பட்டும் வரும் எம் நாட்டு படைப்பாக இன்று மாறியுள்ளது.
கிழக்கிலங்கை இசையமைப்பாளர் சஜய்யின் இசையில் சன்ஜீவ் தன்னுடைய குரலில் இந்த பாடலை பாடியுள்ளார். இலங்கையின் வளர்ந்து வரும் இயக்குனர் டிலோஜன் இயக்கியுள்ள இந்த பாடலில் ஏனைய கலைஞர்களும் சிறப்பாக தம்முடைய திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.
இந்த பாடல் தற்பொழுது யூடியூப்பில் ஒரு வாரத்திற்குள் 75000 பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடதக்கது. கலைத்துறையில் தென்னிந்திய சினிமாத்துறைக்கு ஈடாக இப்படி ஒரு பாடல் எம் நாட்டில் குறிப்பாக கிழக்கிலிருந்து வெளி வருவது பாராட்டக்கூடியதாகும்.

பாடலை பார்வையிட
https://youtu.be/c5GN5YMtaX0
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :