முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரான பதவிப்பிரமாணம் செய்துகொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் காணொளியொன்றை இன்று பதிவிட்டு இதனைக் கூறியுள்ளார்.
‘பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பொதுஜன முன்னணி கையளித்த தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்பட்டியலில், பஸில் ராஜபக்சவின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
ஆகவே அவர் தேசியப்பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க சட்டம் அனுமதியளிக்காது’ என்றும் நாகானந்த கொடிதுவக்கு சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment