M.l.இர்ஷாத்-
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய, வட மத்திய, ஊவா, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாகணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சிபதிவாகக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பத்தில், காற்றின் வேகமானது, தற்காலிகமாக அதிரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment