அவசரமாக பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புகிறார் ஐ.நா செயலாளர்!

J.f.காமிலா பேகம்-

க்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதியொருவரை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், விரைவில் இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி ஐ.நாவின் அரசியல் பிரிவு தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே (Rosemary A. DiCarlo) கொழும்பு வரவுள்ளார் எனவும், இங்கு உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடுவார் எனவும் தெரியவருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளார். அனைத்து சந்திப்புகளும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறவுள்ளது.

ஐ.நாவின் கிளை அமைப்புகளுள் ஒன்றான மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ள நிலையில், பொறுப்புகூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில், அவதானம் செலுத்துவதை மையப்படுத்தியே ரோஸ்மேரி டிகார்லோவின் இலங்கை பயணம் அமையும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :