கல்முனைப் பிராந்தியத்தில் மேலுமொரு கொரோனா தொற்று

காரைதீவு சகா-

ல்முனைப்பிராந்தியத்தில் நேற்று மேலுமொரு கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டிருக்கிறது. இது இறக்காமப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இப்பிராந்தயித்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளன.
 என கல்முனைப் பிராநதிய சுகாதாரசேவைபபணிப்பாளர் டாக்டர் குண .சுகுணன் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேசத்தில் கண்டுபிடிககப்பட்ட அந்த நோயாளி பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றிய 45 வயது நபர் ஒருவர் அக்கரைப்பற்று வீதியில் உள்ள இறக்காமம் 1 எனும் இடத்தில் தனது வீட்டிற்கு திரும்பியிருந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட PCR மாதிரி பொசிட்டிவ்வாக நேற்று இரவு கிடைத்ததை தொடர்ந்து அவருடைய குடும்ப அங்கத்தவர்களான மனைவி மேலும் நான்கு பிள்ளைகள் உட்பட 5 பேருக்கு பிசிஆர் மாதிரிகள் இன்று எடுக்கப்படுகின்றது.

அத்துடன் கொழும்பிலிருந்து அவருடன் ஒரே பஸ்சில் பயணித்த இன்னொரு நபர் உட்பட அவரின் குடும்பத்தார் இருவருக்கும் சேர்த்து மொத்தமாக இறக்காமம் கிராமப் பகுதியில் இன்று எட்டு மாதிரிகள் எடுக்
இந்த மினுவாங்கொடை பேலியகொடை தொற்று சம்பவங்களை தொடர்ந்து கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழான பிரதேசங்களில் இதுவரை மொத்தமாக 13 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :