இன்று நாவிதன்வெளி அன்னமலை ம.வித். சுகாதாரநெறிமுறைப்படி ஆரம்பம்!


வி.ரி.சகாதேவராஜா-

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம் மூன்றாம்தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பமாகியது.

மாணவர்கள் கைகழுவி முகக்கசவசமணிந்து சமுகஇடைவெளியைப்பேணி பாடசாலைக்குள் பிரவேசித்தனர்.

அதிபர் சீ.பாலசிங்கன் ஆசிரியர் மாணவர்களுக்கான சுகாதாரநடைமுறை விதிகள் பற்றியும் பாடசாலை ஒழுங்கு நடைமுறை பற்றியும் காலையில் விளக்கமளித்தார்.

பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளித்திருந்தனர்.

ஆசிரியர் மாணவர் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு ஏனைய சுகாதாரவிதிமுறைக்கிணங்க உள்ளீர்க்கப்பட்டனர்.

சமுகஇடைவெளியைப்பேணி காலை ஆராதனை இடம்பெற்றது. பின்னர் அதேபோன்று வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டு கற்றல்கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :