தலவாக்கலையில் யுவதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி



தலவாக்கலை பி.கேதீஸ்-

லவாக்கலை லிந்துலை நகர சபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட மிடில்டன் தோட்டத்தில் 32 வயது யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டக்கலை பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

இவர் கொழும்பில் ஆடைச் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்பவர் கடந்த மாதம் 16ம் திகதி கொழும்பிலிருந்து பேருந்தில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இவர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த யுவதி மாத்தரை கம்புறுபிட்டி தனிமைபடுத்தும் நிலையத்துக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் இன்று மாலை அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கொட்டக்கலை பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :