பொத்துவில் ஆதார வைத்திய சாலையின் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தது றபா வி.கழகம்


இர்ஷாத் ஜமால்-

பொ
த்துவில் ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கியில் நிலவி வந்த இரத்தப் பற்றாக்குறை இன்று (01.11.2020) நிவர்த்தி செய்து வைக்கப்பட்டது. கடந்த 1991ஆம் ஆண்டு முதல் சமூக சேவைகளில் ஈடுபாடு காண்பித்து வரும் றபா விளையாட்டுக் கழகத்தினாலே மேற்படி குறைபாடு நிவர்திக்கப்பட்டுள்ளது.

குறித்த குறைபாட்டினை, இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி, அஷ்ரா நஜ்முதீன் அவர்கள் றபா விளையாட்டுக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்ட கழகத்தினர், "உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு ஒன்றினை இன்று (01) பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் நடாத்தினர்.

றபா விளையாட்டுக்கு கழகத்தின் சமூக சேவைகள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் MS பௌமி மற்றும் செயலாளர் ஜெம்ஸித் ஆகியோர்களது நெறிப்படுத்தலின் கீழ் குறித்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பங்கு பற்றிய சுமார் 30 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களது உதிரத்தை வழங்கினர்.




2 Attachments











ReplyReply allForward





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :