உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் : இசங்கணிச்சீமை மற்றும் ஆலிம் நகர் கிராம பயனாளிகளிடம் வீடுகள் கையளிக்கப்பட்டது.



நூருல் ஹுதா உமர்-
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக் கருவில் உருவான "வட்டாரங்களுக்கு ஒரு வீடு" என்ற அடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் வழிகாட்டலில் இசங்கணிச்சீமை மற்றும் ஆலிம் நகர் கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடுகள் நேற்று (01) குறித்த பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், அக்கறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், அக்கறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம நிலதாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர், வாழ்வாதார உத்தியோகத்தர், வீடமைப்பு அதிகார சபையின் பிராந்தியத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :