திருகோணமலை பாலையூற்று பகுதியில் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பாழடைந்த விடுதியினுள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
திருகோணமலை மஹமாயபுர, மட்கோ பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான ஏ. பீ. விஜயபால (67) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது தாயாருடன் வாழ்ந்துவரும் இவர்வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக திங்கட்கிழமை (02) மாலை கடைக்குச் சென்றதாகவும் இதனை அடுத்து அவர் வீட்டுக்கு இரவு வருகை தராத காரணத்தினால் அவரது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை எனவும் பொலிசாரிடம் தாயார் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று(3) புகையிரத திணைக்களத்தில் கடமையாற்றி வரும் ஊழியர் ஒருவர் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பாழடைந்த வீட்டுக்குள் தொலைபேசி அழைப்பு வரும் சத்தம் கேட்டதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆணொருவரின் சடலத்தை அவதானித்துள்ளார். இதனை அடுத்து அவர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சடலத்தை சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment