ஓய்வுபெறும் மஹிந்த தேசப்பிரியவுக்கு தூதுவர் பதவியா? அவர் வழங்கிய பதில்!

J.f.காமிலா பேகம்-

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்றை வழங்க அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்திவருவதாசக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 12ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார்.
இந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.

இருந்த போதிலும் இது தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவியபோது, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தூதுவர் பதவி அல்ல, எந்தவொரு பதவியையும் ஏற்க நான் தயாரில்லை. ஓய்வு காலத்தை மிகவும் அமைதியான முறையில் வாழ விரும்புகின்றேன். 

எனது ஓய்வை ஏற்கனவே அறிவித்துவிட்டேன். நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்தகாலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல்போனது கவலைதான் – என்று பதிலளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :