தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்றை வழங்க அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்திவருவதாசக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 12ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார்.
இந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.
இருந்த போதிலும் இது தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவியபோது, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தூதுவர் பதவி அல்ல, எந்தவொரு பதவியையும் ஏற்க நான் தயாரில்லை. ஓய்வு காலத்தை மிகவும் அமைதியான முறையில் வாழ விரும்புகின்றேன்.
எனது ஓய்வை ஏற்கனவே அறிவித்துவிட்டேன். நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்தகாலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல்போனது கவலைதான் – என்று பதிலளித்தார்.
0 comments :
Post a Comment